Translate

Sunday, May 7, 2017

ஒரு சிற்றிதழ் படைப்பாளி உருவான வரலாறு

ஒரு சிற்றிதழ் படைப்பாளி உருவான வரலாறு.
ஒரு சாதாரன மாணவன் ஒரு சாமான்ய எழுத்தாளனான கதை.
மறதிப் பாழில் மக்கிப் போகாத சிற்றிதழ் வரலாறு.
எழுத்தாளர் திரு.பாட்டாளி,
திருச்சி.

வணக்கம் நண்பர்களே.

முக நூலில் என்னுடைய சிற்றிதழ்கள் தேடும் படலத்தில்,  எப்போதும் பதிவுகளின் கீழ் ஏதாவதொரு சிற்றிதழ் பெயரை தொடர்ந்து பதிவு செய்து வரும் திரு.பாட்டாளி அவர்களின் பதிவுகள் என்னை மிக கவர்ந்தன. அந்த பதிவுகளுக்கான சிற்றிதழ் முகப்புப் படங்கள் கேட்டு வாங்கி இருக்கின்றேன். ஒரு முறை நான் கோபித்துக் கொண்டது கூட உண்டு.